Saturday 22 February 2014

சிறுகதைகள் #2: சராசரிகளும் ஒரு உரையாடலும்

உண்மையை சொல்லனும்னா அதை ஜீரணிக்கவே முடியல அதுவும் அதை அவன் வாயாலே சொல்லிக் கேட்டதுமே உள்ளே குமைய ஆரம்பித்து விட்டது, இனி இது தணிய எத்தனை நாள் ஆகுமோ? அது எப்டி இவனுக்கு, அதுவும் MBBS படிச்ச பொன்னு,காலக் கொடுமைடா, எவ்வளவு சாதாரணமா சொல்றான், அட இவன் அந்த பொன்னுக்கு தகுதியான ஆளா இருந்தாக் கூட பரவாயில்லயே, மனசு அமைதியாகிடும்,இவனுக்கு எப்டி, அதுவும் ஆறு வருஷ காதலாமே, இப்படியெல்லாமா கூட நடக்கும்.உள்ளுக்குள் இவ்வளவு புகைச்சலை கிளப்பிவிட்டு எந்த சலனமுமின்றி வாங்கிக் கொடுத்த சரக்கை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தான் குமார்.சின்ன வயசு  நண்பன். ஐந்தாம் வகுப்பு வரை ஒன்னா படிச்சோம்.அதற்க்குப் பின் கூட சிறிது காலம் தொடர்பில் இருந்தோம்.


அன்னைக்கி ஞாயிற்றுக்கிழமைன்றதால நமக்கும் வேறு வேலை இல்லை இதற்க்கு முன் கூட இருந்ததில்லைதான்,நண்பனும் அவவாறேனு பார்க்கும் போதே தெரிந்தது அப்பவே மிதமான மப்புல இருந்தாப்டி.


எப்டி சொல்றதுனு தெரியல அப்போ என் கூட பள்ளி முடித்து கடைசி வரை சென்று வேலையில் உள்ளது சிலர்தான்.மற்ற அனைவருக்குமே பிடி இல்லை. அவர்களுக்கான ஏதோ ஒரு தருணத்தில் வழி தவறி போயிட்டாங்கனு தான் சொல்லனும்.அதுவும் குமார் நிறையவும் கெட்டுப் போயிருந்தான்.


கொஞ்ச நேரம் பழசுகளை சிலாகிச்சி பேசிட்டிருந்தோம். மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துப் பார்த்து அது தொடர்புடையவர்களோடு  பகிர்ந்து கொள்வது நன்றாகத்தானிருக்கும், ஆனா சந்தோஷம்ன்றது அரிதாகிப் போன நாட்களில்,நனவில் நிறைவேறாத சில ஆசைகள் எப்பயாவது அபூர்வமாக கனவில் நடப்பது போலக் காண நேர்ந்து பின் திடீர்னு விழிப்பு வந்து அடையும் ஏமாற்றம் மாதிரி நெஞ்சடைக்கும் இதுவும்,முடிந்து போன விஷயம் என்ற பிரக்க்ஞை திரும்பும்போது.


அன்னைக்குதான் அந்த ஜீரணிக்கவே முடியாத விஷயத்தை சொன்னான்.


'ரொம்ப நாள் கழிச்சி பார்க்குறோம்,ட்ரீட் உண்டா மச்சி'-குமார்


இல்லைனும் சொல்ல முடியாது, பேன்ட் பாக்கெட்ல பர்ஸ் பொடப்பா இருக்கறத பார்த்திருப்பான்.ஒரு காலத்துல ரொம்ப க்ளோஸ்,அந்த் நினைப்பு இப்பவும்கூட இருவருக்குமே மங்காமல் இருந்ததால்,பக்கத்து டாஸ்மாக்கில வாங்கி வாட்டர் மிக்ஸ் செய்து அங்கேயே ஊத்திக்கிட்டான்.இடையில் மொபைலில் யாரோ அழைக்க சற்று தள்ளிப் போய் பேசிவிட்டு வந்தான்.


திரும்பி வந்து 'நம்ம லவ்வர்  மச்சி' நான் கேட்க்காமலே அவனே சொல்ல ஆரம்பித்து,MBBS முடிச்சிருக்கறதாகவும்,+2 முதலே லவ்வுனும் சற்று சுருக்கமாக ஒரு கொசுவத்தி சுருள் ஓட்டி முடித்தான்.


ஆள் பார்க்கறதுக்கு குடியும் சிகரெட்டுமாக இருந்தாலும் பொதுவாக காதலிக்கிற ஆண்களின் பாவனைகள் குமாரிடமும் இருந்தாலும் கூட 'இவனுக்குலாம் எப்டி செட்டாகும்' என்ற தவறான தீர்க்க தரிசனம் இருந்து வந்ததும் மேலும் அப்டி ஒன்னும் பய பெர்ஸ்னாலிட்டிலாம் இல்லை என்பதாலும் ஒரு சமயத்தில் அதையும் கேட்க்காமல் இருக்க முடியவில்லை,


'எப்டி மச்சி இந்த விபரீதம் நடந்தது,நீ வேற சும்மா வெட்டியா இருக்க,அப்டியே இருந்தாலும் அந்த பொன்னு வீட்ல ஒத்துப்பாங்களா?'


'அதுலாம் ஒன்னும் மேட்டர் இல்ல,ஏற்கனவே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணியாச்சு'ஆர்வத்துடன் அவனோட மொபைல் கேமராவில் ஜோடியாக எடுத்த அந்த பொன்னோட புகைப்படத்தைக் காட்டி'இவதான்டா மச்சி, உங்கிட்ட காட்டாம யாருகிட்ட காட்டப்போறேன்'.கேட்ட கேள்வி சுருக்குனு பட்டிருக்கும் போல 'எப்டி பொன்னு,மடக்கிட்டேன் பாத்தியா' என்பது போல தோரணை இருந்தது.


'ம்ம் வாழ்த்துகள் மச்சி'


கல்யாணம் பண்ணிக்கிறதா வேணாமானு குழம்பி ஒரு வழியா சரி பாருங்கனு வீட்ல ஒப்புதல் கொடுத்து பெண் பார்க்கும் படலம் தொடங்கி காட்டும் அத்தனைப் பெண்களின் புகைப்படங்களை விட பன்மடங்கு நன்றாகத் தானிருந்தது. 'காலக் கொடும, இவனுக்கா இப்டி'.


புகைச்சல் என்றும் சொல்ல முடியாது ஆனால் அதிர்ச்சி அடையாமலும் இருக்க முடியாது.சில கசப்பான உண்மைகள் தெரிய வரும்போது ஏற்படும் அதிர்ச்சி.இவனோட காதல் எவ்வளவுதூரம் போகும்ன்றது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பெண் வீட்டுக்கு தெரியாம ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிற அளவு போறதும்,அந்த அளவு இவனை நம்பறதும்,அப்படி இவன்கிட்ட என்ன இருந்தது,என்ன கண்டுகிட்டா இவங்கிட்ட.


ஒரு பெண்ணால காதலிக்கப் படுறது எல்லா ஆமபளைக்குமே அது அவன் பிறந்ததுக்கான முதலான அர்த்தம்ன்ற உண்மையோ பொய்யோ,அதுவரை பெற்று வந்த அகஉலக அறிவு அதுமாதிரி தெளிவில்லாமல் உணர்த்தி இருந்ததாலும் நண்பனுக்கு அது இயல்பாக ஈடேறிவிட்டதாலும் அதனால் உண்டான கருகல் என் புற உலக அறிவின்மையைத்தான் தெள்ளத் தெளிவாக காட்டியது.


உண்மையில் இதை எப்படி புரிந்து கொள்ளனும்னு தெரியல.இல்ல இதுல புரியமுடியாத அளவுக்கு எதுவும் இல்லாமலும் இருக்கலாம்.ஆனா ஒன்னுமே இல்லைனு கண்டிப்பாக போக முடியாது என்றுதான் தோன்றுகிறது.


அதுவும் மருத்துவச்சி,தாங்கிக் கொள்ள முடியாதுதான். வெட்டிப்பய,குடி, சிகரெட்,ஹான்ஸ் எல்லாம் பழக்கமும் இருக்கு அவனுக்கு எப்டி இந்த பொன்னு?சிரிப்பாகவும் இருந்தது.அடப்பாவி அவன் உன்னோட நண்பன்டா, இப்டியா வயிறி எரிஞ்சி புலம்புவ.அதுதான் பிரச்சணை அவனும் என்னப் போலத்தான நா சுமார் மூஞ்சினா அவன் ரொம்ப சுமார் மூஞ்சி,மயக்குற அளவுக்கு ஆணழகன் கூட இல்லையே.இந்த சூட்சமம்லாம் புரிஞ்சிருந்தா நாமளும் பல ரவுன்ட் வந்திருக்கலாமோ அல்லது அது மாதிரி சூட்சமம்லாம் எதுவுமே அதில் இல்லையோ என்னவோ?


நமக்கும் தானே நடந்தது அது,கலைவாணி கூட நம்மகிட்ட நெருங்கிதானே வர முயற்சி செஞ்சா.நாமதான் அது ஏதோ பெரிய தப்புனு விலகி போயிட்டோம்.அப்போ இருந்த புரிதல அப்படி.ஆனாலும் ஆசை விடலயே நானும்தானே சைட் அடிச்சேன்.என்ன செய்யறது.ரெண்டு வருஷம் அப்டியே பார்த்துகிட்டே இருந்தோம்,அவளும் என்னென்னமோ செஞ்சா,நமக்கு தான் அது என்னனு புரியவே இல்ல,மக்கு,கடைசில 'போடா பொட்டை'னு சொல்லிட்டு போயிட்டா.எதுக்கு அப்படி சொன்னா நாம என்ன செய்யாம இருந்தோம்,பார்த்து சிரிச்சேன்,சிரிச்சேன்,வெறிக்க வெறிக்க பார்த்தேன், எங்க்கிட்ட முன்னாடி வந்து வேணும்னே குனியும்போது வச்ச கண் விலகாமலே பார்த்தேன் வேற என்ன செய்யனும்.


அவ என்ன நினைக்கிறானு எனக்கு எப்படி தெரியும்.சொன்னாத்தானே தெரியும்.ஆமா நானாவது சொல்லிருக்கலாம்.நான் எப்டி சொல்லுவேன் நான்தான் அது சரியா தவறானு புரிஞ்சிக்க முயற்சி செய்தே காலம் போயிடுச்சி.அட அவளாவது சொல்லிருக்கலாம் 'உன் கூட ஒரு நாள் படுக்கனும்'னு, சொல்லிருந்தா எப்படியாவது முடிச்சிருப்பேன்.ஆனா அந்த பொன்னு என்ன நினைச்சிருக்குமோ ஒரு வேளை என்னிடம் வேற எதாவது பரிவு,கணிவு இல்லை நவரச பாவணைகள் எதாவது எதிர்பார்த்திருக்குமோ என்னவோ? எப்டியோ அதை புரிந்து கொள்வதற்க்குள் கைமீறிப் போயிடுச்சி.


காதல்னு வேறு சொல்லுறான்.எப்படி காதல் வந்தது அந்த பொன்னுக்கு இவன பார்த்து.ஐய்யோ மண்டையே வெடிக்கிற போல இருக்கு.நானும் தான் காதலிச்சேன்.ஆனா எப்டி அந்த ஈர்ப்பு வந்தது.சொல்லவே அசிங்கமாத்தான் இருக்கு.அப்பவே எப்படி நாட்டுக்கட்டை மாதிரி இருந்தா அவ.அதை பார்த்துதான சொக்கிட்டேன்.எப்படியோ காதல் வந்து தொலைஞ்சிடுச்சி. அதைக் கூட க்ரிமினல் கேஸ் ஒன்னுல போஸ்ட் மார்டம் ரிப்போர்டுக்காக மாட்டிகிற பொனத்த அறுக்குற மாதிரி அந்தக் காதலை அறுத்துக் குழப்பி, புதைத்துப் பின் எழுப்பி ஒருவழியா அது காதல்தான்னு தெளியுற சமயத்துல எல்லாம் போச்சு.


வேற!!!!நினைத்து பார்த்தா நிறையவேதான் இருக்கு இதுபோல சம்பவங்கள்.குமார் அது மாதிரி ஒரு சம்பவத்த புரிந்துகொண்டு இல்லை அதில் அவ்வாறு சிந்தையை கசக்கி பிழியும் அளவில் ஒன்றுமே இல்லையென்ற மனோபாவம் இயற்கையாகவே இருந்ததால் அந்தப் பெண் அவனை விரும்பியிருப்பாளோ?


உலகத்தை சுத்தி வந்து ஞானப்பழத்தை பெறமுடியாது போன முருகனுக்கு என்ன மாதிரி வெறுத்துப் போயிருப்பாரோ அப்படித்தான் இருந்தது.அவனுக்கு மட்டும் அந்தப் பழம் கிடைத்தது எப்டி,அங்கிள் வயசு ஆகிப்போன சமயத்துல இந்த மாதிரி ஏமாந்து போனதாக வரும் எண்ணம் நல்லதுக்கில்லைதான்.அப்டி ஒன்னும் வயசு ஆகிடல பார்க்கலாம்.


பார்க்கவே ரவுடி மாதிரி இருக்கான்,நல்லா ஜாலியா வாழ்க்கையை கடத்துறான்.இதுலாம் தப்புனு ஒதுங்கி வீட்ல சொல்லிக்கொடுத்ததை அறம்னு நம்பி வளர்ந்து ஏமாந்து  புலம்பல் தான் மிச்சம்.நானாவது தேவலாம்,அந்த கேஸ் கம்பெனி ஓனர் பையன் ஒருத்தன் இருக்கானே,ஐயோ உலகமே தெரியாம இல்ல வளர்ந்திருக்கான் முப்பது வருஷமா,அம்பி மாதிரி, நாமளாவது இப்ப யோசிக்கிறோம், அவனுக்கு,சொன்னாலும் ஏதோ 'அபிஸ்டு,அபச்சாரம்'னு சொல்லிட்டு போவான்.அதுவும் நல்லதுதான் ஒருவகையில்.


இது நன்மை இது தவறுனு முன்கூட்டியே பழுக காய்ச்சி அடித்து அடித்து இறுக வைத்து விட்ட சூழ்நிலை நம்மளோடது.அப்டியே இருந்துட்டா பரவாயில்ல, உண்மைனு எதையோ இந்த மாதிரி தெரிஞ்சிக்கும்போதுதான் கடைசில என்ன இழந்தோம்ன்றது தெரிய வருது.தெரிஞ்சும் ஒன்னும் பலனில்லை,செக்கு மாட வெளிய அவுத்துவிட்டா சுத்தி சுத்திதான் வரும்.


குமாருக்கு இந்த கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருக்கலாம்,அதனால பிள்ளையார் கணக்கா ஞானப்பழத்தை எடுத்துகிட்டான்.


*****


சரக்கு முழுவதையும் குடித்துவிட்டும் நிதானமாகத்தான் இருந்தான் குமார்.


பாக்கெட்ல இருந்த சிகரெட் ஒன்ன எடுத்த பற்றவைத்து இழுத்தான்.


'நிறைய கெட்டுபோயிருக்க போல'அந்த கணத்தில் நினைத்து கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது,ஹான்ஸ்,சரக்கு பழகவில்லை என்பதான அற்ப காரணங்களால்.


'எப்டி ரவுடி மாதிரி தெரியுதா'


'கிட்டத்தட்ட'


'இல்ல மச்சி நிறைய பிரச்சணை'


'உனக்கு என்னடா பிரச்சணை,ஜாலியா இருக்க'


'உனக்கு தெரியாதுடா,வேல ஒன்னு வாங்கி தர்றேன்னு சொல்லி ஒருத்தன் ரெண்டு லட்சம் ஏமாத்திட்டான்,வீட்ல வேணாம்னு தான் சொன்னாங்க நாந்தான் சண்டை போட்டு கடன் வாங்கி...இந்தப் பிரச்சணை போதாதுனு போன மாசம் போதைல தெருல  மூஞ்சிய பேத்துட்டேன்,எப்படான்னு இருக்கானுங்க, 'கவலை தொணிக்கும் தோரணையில் பேசியது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.


நீ ஒன்னும் இதுக்குலாம் கலங்குற ஆளில்லயே மச்சி' செஞ்சதுக்கு வருந்தி பின்னாடி நினைத்து பார்க்காத எதுவும் தவறு இல்லைதான்.


'இல்ல மச்சி,வீட்டு பக்கம் போயே ரொம்ப நாளாச்சி,வீட்லயும் உள்ள விட மாட்றாங்க,+2 பாஸ் பண்ணவே நாலு வருஷம் ஆயிடுச்சி,அப்றம் இன்ஜினியரிங் சேர்ந்து, அதுக்குள்ள நா பார்த்த சின்ன பசங்கெல்லாம் வேலைக்கு வந்துட்டானுங்க, அப்போ எதுவும் தெரியல, படிக்கலனாக்கூட எதாவது தொழில் செஞ்சிட்டு இருந்திருப்பேன, எவன் மூஞ்சிலயும் முழிக்க முடியல' போதையேறிய கண்களோடு தன் வலிகளை சொல்லி, சிகரெட் புகையை வெளியே ஊதி,அவனுள்ளும் நானறிய வாய்ப்பில்லாத அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்யாத துக்கத்தையும் சற்று ஊதி இலைபாற நினைத்தவன் போல மேலும் தொடர்ந்தான்.


'வீட்லயும் முன்ன மாதிரி இல்ல,எத்தனி நாளைக்குதான் அவங்களும் பொறுத்து போவாங்க, இந்த கஷ்டத்த மறக்க சரக்கு, அடிக்கலனா துக்கமே வரமாட்டேங்குது,ஒன்னு தெரியுமா? நா வீட்டுக்கு போய் ஒரு மாசம் ஆகுது, அக்கா வீட்ல காசு வாங்கி திண்ணுட்டு, குடிச்சிட்டு திரியுறேன்,எவனாவது மாட்டுவான்,நாள் ஃபுல்லா சரக்குதான்,போதை இறங்கனதுமே என்னோட நிலைமைய நினைச்சி பார்த்தா நெஞ்ச அடைக்குது,எப்படி உயிரோட இருக்குறேன்னே தெரியல மச்சி,நரக வேதனையா இருக்கு,இதுல வேற அந்த பொன்னு,என்ன செய்யுறதுனே தெரியல,நானே என்னோட லைஃப கெடுத்துகிட்டேன்னு தான் நினைக்கிறேன்' அவனோட வேதனைகளை சொல்லி என்னோட அர்த்தமே இல்லாத புலம்பல்களை இன்னும் அர்த்தமில்லாததாக்கினான். .


'அந்த பொன்னுக்கு இதுலாம் தெரியுமா டா'


'வேலை தேடிட்டு இருக்கேன்னு சொல்லி வச்சிருக்கேன்'


கொடும கொடுமனு இங்க வந்தா இங்க ஒன்னு தலைய விரிச்சி போட்டுக்கிட்டு டிங்கு டிங்குனு ஆடிச்சாம் அந்த மாதிரித்தான் இருக்கு.


'ம்ம் அவனவனுக்கு ஆயிரம் பிரச்சணை'


'சரி விடு அது என்னோட கஷடம்,அப்றம் உனக்கு கல்யாணம் எப்போ? முடிச்சிட வேண்டியதுதான'


'கல்யாணம் போயிட்டிருக்கு மச்சி,பாக்கலாம்'


'ஒன்னும் யோசிக்காத ,வீட்ல பார்க்குற பொன்ன பண்ணாத்தான் நல்லது,எந்த பிரச்சணையும் இல்ல,பின்னாடி எதாவது கஷட்ம்னாலும் கூட நிப்பாங்க' அவனடைந்த வாழ்க்கைப் பற்றிய புரிதல் அறிவுறையாக வந்தது.


'ஆனா நீ பரவால்ல மச்சி, ஞாபகம் இருக்கா அப்போ சின்ன வயசுல வீட்டுக்கு வருவ,பட்டை போட்டுக்கிட்டு,பொட்டு வச்சிக்கிட்டு,எங்க அம்மா உன்ன சொல்லித்தான் எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க,அப்போ இதை உங்கிட்ட சொன்னது இல்ல,சொல்ல முடியல பொறாமையாவும் இருக்கும்,இப்பக் கூட உன்ன வீட்ல கேட்பாங்க,நானும் உன்ன மாதிரி அப்பலாம் செஞ்சி பார்த்திருகேன்,சாமி கும்பிடுவேன்,காலைல எழுந்து புத்தகத்தை எடுத்து வச்சிக்கிட்டு படிக்கலாம்னு ட்ரை பண்ணிருக்கேன் ஆனா என்னோட ஆர்வமெல்லாம் வேறயா இருந்துச்சி அதனால முழுசா செய்யமுடியல'எதோ ஒப்புதல் வாக்குமூலமாக சொல்லி முடித்தான்.


இவன் என்னடா இப்டி புலம்புறான்.அதையெல்லாம் நினைச்சி வெட்க்கபட்ட நாளெல்லாம் இருக்கு.


இவன மாதிரியே நம்மளால சொல்ல முடியுமா,"எப்டி மச்சி அந்த பொன்ன உஷார் பண்ண,சூப்பர்டா எங்கயோ மச்சம் இருக்கு மச்சி உனக்கு, நானும் ரெண்டு மூனு ட்ரை பண்ணேன் எல்லாம் மேட்டர் மச்சி,இப்ப சைட் அடிச்சா மொறைக்க பாக்குறாளுக டா,எல்லாம் காலம் கடந்து போச்சு"இப்டி சொல்ல முடிஞ்சா அது அவனோட புலம்பலுக்கு என்னோட சோடியா இருக்குமா தெரியாது.சொல்லலாம் தான்.ஊரு ஒத்துக்காது.


குமாரோட சூழ்நிலை வேறு கட்டுப்பாடு அதிகம் இல்லாத ஒன்று,காட்டு மிருகம் போல,நம்மளோடது மிருகக் காட்சி சாலை,ரெண்டு மிருகத்துக்கும் போராட்டம் இருக்கும்,காட்டுல அதோட இயற்கையான குணங்களோட ஒவ்வொரு வேளை உணவுக்கும் போராட வேண்டியிருக்கும்,கம்பிக்குள்ள இருக்குற மிருகத்துக்கு அந்த போராட்டம் இல்ல,ஆனா தன்னோட இணையை கண்ணுல காட்டாம ஊசி போட்டு கர்ப்பம் தெரிக்க வைக்கிற கொடுமை உண்டு,இந்த உண்மை எதுவும் தெரியாதிருந்து,சட்டம் வகுத்து வாழும் மனித சமூகத்தில் குமாரை வைத்து பார்க்கும்போது நம்மளோட புலம்பல்கள் ஒன்னுமே இல்லைதான்.


இல்லை இப்படியாகவும் இருக்கலாம்,அவரவரின் புரிதலில் தனக்குத்தானே போட்டுக் கொள்ளும் வட்டம் அதில் அமையும் சூழ்நிலைகள் பொறுத்து. சோதனைகள் இருவருக்குமே இருக்கும்தான்.துக்கமோ சந்தோஷமோ அதன் வடிவம்தான் வேறாக இருக்கும்,வீரியம் என்னமோ ஒன்னுதான்.


என்னவோ இன்னமும் புதிராகத்தான் இருக்கு.


'சரி மச்சி நீ என்கூட வீட்டுக்கு வா,உன் கூட வந்தா வீட்ல விடுவாங்க,வீட்ல உன்ன பார்த்தா ரொம்ப சந்தோசப் படுவாங்க' போதை அதிகமாகி நிலைகொள்ளாமல் தள்ளாடினான் குமார்.


'வேணாம் இன்னொரு நாளைக்கி வரேன்,நீ வேற தள்ளாட்ற,வண்டில ஏறு வீட்டு முனைல விட்டுடறேன்'


'மச்சி நீ எதும் சாப்பிடலயேடா,வா பெப்சி குடி,இருபது ரூபா இருந்தா தா' எங்கிட்டயே காசு வாங்கி கடையில் பெப்சி வாங்கினான்.பாதி குடித்துவிட்டு கொடுத்தேன்.அதையும் வாங்கிக் கொண்டான்.


'இன்னிக்கி ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா,பார்க்கலாம் மச்சி' கண்கள் சொருகி குரல் தடுமாறியது குமாருக்கு.


'பார்க்கலாம் மச்சி' அவன் சொன்னதை ஆமோதித்து திரும்ப சொல்ல தோணவில்லை,எனக்கே சந்தேகமாகத்தான் இருந்தது,தெளியவாவது செய்ததா என்றால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


Tuesday 11 February 2014

Photography #2: Kutties

Photography #1: Chennai

Bloggers Intro #13: MRR Photography


M Ramachandran Ranganathan

தமிழ்க்கவிதைகள் #2 : அம்மா



என் தலைமுடி களைந்திருப்பதில் கூட
ஆயிரம் அர்த்தங்கள் சொல்பவள் நீ...

வாய் மொழியும் முன்பே 
மனதின் முடிசிச்சுகளை அவிழ்ப்பவள் நீ...

என் மனதில் யாரும் இல்லை என்றதும் 
கிண்டலாய் சிரித்தாய்...
எப்படி மறந்தேன் நீ உள்ளிருப்பதை...?

உன்னை போல் என்னை நேசிக்க 
இன்னொரு பெண் இருப்பது சந்தேகமே..!

நீ இல்லா உலகம் - 
நிலவில்லா கிரகம் எனக்கு,
இருந்துவிடு என்னோடு என் இறுதிவரை.

இன்னொரு பிறவி என்று ஒன்றுருப்பின் 
மறுமுறை சுமப்பாயா என்னை...?

உன் நிழலில் வாழவே ஆசைப்படுகிறேன்...:)

Bloggers Intro #12: வசந்த் சாஸ்திரி




A seeker of Life by spirituality, Art and Agriculture.


Bloggers Intro #11: இசைந்தவன் ராஜசேகரன்



இசைந்தவன் ராஜசேகரன்

இசையில் இழை #1: இதயத்திலிருந்து சில ஸ்வரக்கோர்வைகள் - 1

இத்தொடருக்காக எந்த பாடலை முதலில்  எடுத்துக்கொள்வது என்ற குழப்பமே இல்லாமல் நான் எடுத்துக்கொண்ட பாடல் "அங்கும் இங்கும் பாதை உண்டு" !!! மெல்லிசை மன்னரின் மிகச்சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.  இசைஞானியின் பாடல்களில் இருந்து இவரது பாடல்களில் சில வேறுபாடுகள் இருக்கும். இவர் வாத்தியகோர்ப்புகளை  விட பாடலில் பல நுணுக்கங்களை ஒளித்து வைப்பார் ! இவரின் இசை 80களுக்கு முந்தைய ரசிகர்களுக்கு, குறிப்பாக 60களில் பிறந்தோருக்கு,  மிகவும் பிடித்தமானவை.  பாடலுக்கேற்ற வரிகள் எடுத்துகொள்வது அல்லது குறிப்பிட்ட சூழலுக்கேற்ற பாடலை வடிவமைப்பது இவருக்கு மிகவும் எளிது .  இதற்கு உற்ற துணை - கவியரசின் வரிகள் மற்றும் 60களில் டி.எம்.எஸ், சுசீலா பிறகு எஸ்.பி.பியின் வருடும் தென் குரல்கள்.!!

இந்த பாடலும் எம்.எஸ்.விக்கே உரித்தான ஒரு பாடல் ! பாடல் ஒரு ghazal பாடலை போல் மெல்ல வருடி செல்லும் ; எம்.எஸ்.வி 70களில் அமைத்த பெருவாரியான பாடல்கள் ghazalகளை ஒற்றியே இருக்கும்.  ghazal பாடல்கள் நுணுக்கமான ராக இலட்சணங்களையும்  மிக சிறந்த பாடல் வரிகளையும்  கொண்டிருக்கும்; பெரும்பாலும் அன்பு, காதல், இவற்றை மிக அழ்காக வெளிப்படுத்தி நம் உள்நிலைக்கு அமைதியான ஓர் ஆனந்தத்தை தரும். இப்பாடலும், என்னை பொருத்தவரை அவ்வகையினை  சேர்ந்ததே. மேலும்   கவியரசின் வரிகள் இந்த மொத்த படத்தின் கதையும் சொல்லிவிடும் ."கதை எழுதி பழகிவிட்டாள் -முடிக்க மட்டும் தெரியவில்லை " "அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே திருத்துதம்மா " போன்ற வரிகள் நம்மை புன்னகை பூக்க வைக்கும். இப்பாடலின் அமைப்பு ரஜினிகந்தா என்ற ஹிந்தி படத்தில் சலில் சௌத்ரி இசையமைத்த கை பார் யுன்ஹி தேக்ஹா என்ற அற்புதமான பாடலை ஒத்திருக்கும்.  ஆனாலும் எம்.எஸ்.வி அவருக்கே உரித்தான வகையில் அந்த பாடலின் சாயல் துளி கூட தெரியாத விதத்தில் மெட்டமைத்திருப்பார் .  மேலும், எஸ்.பி.பி இதை அனுபவித்து  பாடிய விதம் மற்றும் அவர் பாடிய பல நுணுக்கமான சங்கதிகள்  இதை வேறு யாரும் பாடி கெடுக்காமல் இருக்க வேண்டுமே என்று நம்மை பதைபதைக்க வைக்கும் !

இப்பாடல்களின் youtube link இதோ :

Kai baar yunhi dekha (Rajnigandha)


Angum ingum

Friday 7 February 2014

Flora and Fauna #1: Machli - The Queen of Ranthambore

Recently a good family friend Mr. Nalla Muthu (Wildlife photographer) shared a beautiful article about Machli which struck me to share my experiences with her and her legacy.  

Ranthambore tiger reserve is one of the largest and one of the oldest tiger reserve in India located in the East of Rajasthan. It's open for public 9 months a year and one can enter the forest with proper permission and payment. There are 6 officially permitted routes in ranthambore.

As you might know, Tigers lead solitary lives and establish and maintain home ranges. Resident adults of either sex tend to confine their movements to a definite territory, within which they satisfy their needs.

Machli means Fish in Hindi. She got her name Machli because she got a fish shaped marking on the left part of her face. In ranthambore forest there's a Fort built by Jaipur kings. The Tiger which has the throne is considered the King or the Queen of Ranthambore. That range is also fertille with lot of animals to hunt. On an average a tiger would hold the throne for about 3 to 5 years. But machli managed to hold it for more than 7 years. This plus her muscular majestic looks has brought her to the limelight all over the globe. The Queen of Tiger dynasty is now devolving, a hard fact to accept.

Please read Mr. Nalla's post below and please visit ranthambore tiger reserve and you might have a chance to sight the majesty. :-)


Thank you. I'll be back with a bang soon! ;-) 


Bloggers Intro #7: Aravind

Aravind




Hi guys, I'm new to blogging world and I've always wanted to write about my perspectives on things. I should thank my good old friend Mr. Arul to have given me the opportunity into the other world (The world of blogging). I'd be happy if every reader help me evolve and I'm looking forward for a healthy discussion :-)



Bloggers Intro #6: Madhan

Wednesday 5 February 2014

Bloggers Intro #5: விடுப்புமுனி

சினிமா விமர்சனம் #1: பிக் பிஷ்






சிறுவயதில் இருளைக்கண்டு பயந்த போது, நம் அப்பா எதாவது குட்டி கதைகள் (அ) கிளைக்கதைகள் சொல்லி நம்மை தூங்க வைப்பதுண்டு. பாலக மனத்தில் பயம் நீங்கினாலும் , நம் அப்பா அதிலிருந்து நம்மை மீட்டு விடுவார் என்ற நம்பிக்கை உருவாகிறது.படிப்படியாக நாம் நம் அப்பாவின் நடவடிக்கையை கண்டு பெருமிதம் கொள்வோம், ரசிகன் ஆவோம்.நமது அடுத்தடுத்த செய்கைகளில் நமது inspiration ஆக அவர் இருந்திடுவார். 

காலப்போக்கில் நம்மை நாமே அறிந்து கொள்ளும் தருணம் வரும் வயதில், அவர் மீது ஈர்ப்பு குறையும், மாறும் , மழுங்கும் (அ) இல்லாமல் போய் விடும். ஈர்ப்பு கூடும் என்பது அரிதே.

இது பெரும்பாலானோர் வாழ்க்கையிலும் ஒரு அத்யாயமே. அப்பா மகன் உறவை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் சமீபமாக(2005 பிறகு) வந்த படங்கள் அதிகம். (தவமாய் தவமிருந்து, எம் மகன், சந்தோஷ் சுப்ரமணியம், வாரணம் ஆயிரம் மேலும் சில). ஒவ்வொரு படமும் ஒரே மையக்கரு இருந்தாலும் கதை அமைப்பில் சற்று வித்த்யாசம் தென்படும். [நமக்கு வாரணம் ஆயிரம் படம் தவிர மத்தது எல்லாமே பிடித்தம் தான்].

இவ்வகை படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் நீங்கள் Big Fish படத்தை ரசிக்கலாம்.


தனது திருமண விழாஇறுதியில், தனது சிறு வயதில் சொன்ன தற்பெருமை கதைகளை , அப்பா(Edward Bloom) எல்லாரிடமும் வயது வரம்பு பார்க்காமல் அனைவரிடமும் பகிர்கின்றார். கேட்பவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்பதால், இம்மாதிரியான கதைகள் சொல்வது அவருக்கு மிகவும் பிடித்தம். ஆனால் மகனுக்கோ(Will Bloom) இதை மீண்டும் மீண்டும் கற்பனை செய்து பழக்கப்பட்டதால் மிகவும் மொக்கையாக இருப்பதென்று உள்ளுக்குள் ஒரு புழுக்கம். அதனால் மோதிரம் மாத்திய கையோடு அந்த Marriage Hall ஐ விட்டு வெளியே வந்துவிடுகிறான்.

தனிக்குடித்தனம் செல்லும் முன்னர் தனது மொக்கையான அனுபவத்தை தன் அப்பாவிடம் எடுத்து கூறுகின்றான்.
"இனிமேல் இது மாறி ப்ளேடு போடாதீங்கப்பா தாங்க முடீல" என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறான்.
அப்பாவும் "உனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது என்றால் இத்தோடு நான் நிறுத்திக்கிறேன்" என்கிறார்.
"அப்பா ! எனக்கு மட்டும் தர்ம சங்கடம் கெடயாது அது உங்களுக்கும் தான், உங்க கதைல பாதி உண்மை கெடயாது, சும்மா அது செஞ்சன் இது செஞ்சன் சொல்றீங்க, எத்தன பேரு இத அமைதியா கேட்பாங்க ? இது ஏன் உங்களுக்கு புரிய மட்டேன்குதுனு தெர்ல " என்று கூறி வெறுப்புடன் பிரிந்து செல்கிறான்.

பின்னர் கதை தடம் மாற்றம் (தடுமாற்றம் அல்ல !) அப்பாவின் இளம் வயது பயணங்களை , வீர தீர சாகசங்களை ஒரே சீராக ப்ளாஷ்பக் காட்சிகள். அதில் அவர் தனது ஊரிலேயே(Ashton) மிகப்பெரிய சீக்காளி, இந்த ஊர் ஒரு சிறிய pond என்றும் தான் ஒரு பெரிய Fish என்று நம்பிக்கை கொள்கிறார். அந்த ஊரை விட்டு செல்கிறார், வேறோரு ஊர் போகும் வழியில் யாரும் உபயோகம் செய்யாத பாதையை அவர் தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு பசுமையான நகரத்திற்கு(Spectre) வழி கொண்டுள்ளது. அங்கு சில காலம் கழித்து அந்த ஊரும் ஒரு சிறிய pond என்று நினைக்கிறார். பின்னர் அங்கிருந்தும் விடை பெறுகிறார். பின்னர் வேறொரு ஊர் சென்று அங்கிருக்கும் circus இல் ஒரு அழகியை காண்கிறார், அவரை மணக்கிறார். பின்னர் ஒரு வெளியூரில் தங்கி அங்கு வேலையில் சேர்கிறார், தனது உழைப்பால் நிறைய காசு பார்க்கிறார். மீண்டும் சொந்த ஊர் திரும்பும் போது தான் அந்த பசுமை நகரம் Spectre சின்னாபின்னமாகி கிடப்பதை கண்டு அதிர்ர்ச்சி ஆகிறார். கையில் வைத்த பணமும் நண்பரிடம் கடன் வாங்கியும் அந்த ஊரை புனர் நிர்மாணம் செய்து அந்த நகரத்தை விட்டு தன் மனைவியை காண வீட்டுக்கு செல்கிறார்.

கதை மீண்டும் அதே தடத்தில், சில ஆண்டுகள் கழித்து, அம்மாவிடமிருந்து மகனுக்கு(Will Bloom) ஒரு phone செய்கிறாள், அப்பாவிற்கு உடல் நலம் குன்றுகிறது என்று கூறுகிறாள். மகன் அவசரம் அவசரமாக புறப்பட தயாராகின்றான், தானும் வருவதாக அவனது நிறை மாத கர்ப்பிணி மனைவி(Marion Cotillard) சொல்கிறாள். இருவரும் மூட்டை முடிச்சு கட்டுகின்றனர்.

உடல் நலம் விசாரிக்கும் நேரத்தில் மருமகளிடத்தில் தனது மொக்கையை continue செய்கிறார் மாமனார். மகன் காண்டாகிறான்(மறுபடியும்). வீட்டில் உள்ள பழைய சாமான்களை ஒழிக்க உதவுமாறு மகனிடம் கேட்கிறார் தாய். அம்மாவின் வேண்டுகோளிக்கிணங்க மகன் பழைய சாமான்களை ஒழிக்கும் நேரத்தில் தன் அப்பா புருடா விட்ட கதைகளுக்கு சான்றுகள் தற்செயலாக கிடைக்கின்றன. இவை கூட தன் அப்பாவின் புருடா சான்றாக இருக்கும் என்ற சந்தேகத்தை தீர்க்க, தன் தந்தையால் புனர் நிர்மாணம் செய்ய பட்ட நகரத்தை நோக்கி கிளம்புகிறான் மகன்.

அங்கு அவன் தந்தை அவனது சிறு வயதில் கூறிய அனைத்து தற்பெருமை கதைகளும் உண்மையா இல்லையா என கண்டுபிடித்து அப்பாவிடம் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பது மீதி கதை.


படத்தில் நாம நோட் பண்ணவேண்டியது நிறைய. இது ஒரு சாதாரண அப்பா மகன் செண்டிமெண்ட் படமப்பா என்றும் சொன்னாலும், அந்த பிளாஷ்பாக் காட்சிகள் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் career குறித்து முடிவு செய்ய வேண்டிய பாடம்.
திரைக்கதையும் சும்மா கெடையாது (நான் படத்தோட அருமை தெரியாமல் ரெண்டு தடவ தூங்கி படத்த பாதியிலே நிப்பாட்டிட்டன், அலுவல் அயர்ச்சிப்பா :)). கதை இரண்டு தடமாக பிரிந்தாலும், அவை ஒன்னு சேர வேண்டிய இடத்தில் ஒரு seamless fit .



Bloggers Intro #3: CyberHe@d

CyberHe@d


Am CyberHe@d, an entry point for trying out new.

Get to know #1: TOR Browser

Tor Browser



    Writing this post, after several techno-political magazines around the world dried their tongue out by updating the current status of NSA also known as (US)National Security Agency vs Edward Snowden dispute aloud. Coincidentally, came to know about Onion Router, its functionality and its least exposure among internet users. The name being catchy and funny, went to dig out more, as a result, landed on downloading a browser called TOR (not to be spelled as THOR). Before explaining my personal experience about it, a short interesting as well as responsible behaviour of TOR first and in the mean time you may come to know about the relation between Mr.Snowden and this veggie browser.

Unlike Chrome, IE or Opera:

      Been developed on Mozilla's open source though, but TOR's contribution is so unique for those who have deep concerns about their private space in their internet life.Though we knew about the fact that social websites like Facebook, Google Plus, Twitter etc. are US Govt's surveillance friendly which always insists us to be more social and openness under their default settings, so that they will be catching our data into their pockets in a minimal effort. As an unwritten rule, these giants by favoring to its snoopy government wont encourage their users' anonymous operation like covering up their whereabouts and privacy details. That is why TOR functionality is standing rebellious against NSA and this is what TOR Browser is all about. Its rebellious behavior well exhibited by standing against conventional browsers' functionality. Tor, an acronym for "The Onion Router" is a no evil software assures us in its download note of being untraceable of user's physical location or messages when surfing several websites. Cool isn't? 

How it works?

              When visiting say for example visiting facebook using this onion type browser, the data from your side with all your vital information will not hit facebook servers directly instead, it will be carried into several TOR relays a virtual circuit group which will encrypt your data for each successive relay.(These multi-relays are comprised like onion layers, so the name). The choice of path to ToR relay is also randomly selected. Upon successive encryptions or re encryptions will hit the facebook servers and the data journey completes by serving you your facebook home page with no spilled beans. To know more about TOR operations, please visit by clicking here. Though various IT experts blames this concept citing several loopholes in its operations, there is no doubt that the efforts made to protect users sensitive information shall not be left aside or ignored. This saviour of users' data looked very promising to Mr. Edward Snowden, a whistleblower who became celebrity when exposing the aggressive surveillance program conducted by United States of America against all the netizens. Mr.Snowden used this Tor browser for any online communications thereby he was very successful in conveying out his govt. surveillance activity without opening hood. I got a nice experience of being secured internet surfer, when logged into facebook, it frequently tested me whether am an autobot since my location not being exposed by my TOR browser. You can also I believe experience the same.



Please provide your experience or feedback here. Discussions are also welcome.

Monday 3 February 2014

Bloggers Intro #2: தவசி

தவசி



தேடி டாவு நிதம் அடித்து பல சின்னஞ்சிறு செருப்படிகள் வாங்கி பலர்கூடி குட்டிச்சுவர் ஏறி ஆணிகள் சில பிடுங்கியே வீழ்வேன்!


சிறுகதைகள் #1: காளையும் பின்னே ஒரு பரிணாம வளர்ச்சியும்




வெயிலில் வெந்து தகித்துப்போன தார் சாலை பின்னிரவின் இலேசான குளிரில் இலைப்பாறிக் கொண்டிருந்தது.கிடைத்ததை தின்று அரை குறை வயிற்றுடன் நகரின் பிரதான சாலையோரம் உள்ள அரசமரத்தடியில் உட்கார்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தது கொம்பன் காளை. அப்படியொன்றும் விருந்து இல்லை,இருந்த இடத்திலே சகலமும் தேடி வந்த காலம் கனவுபோல் ஆகிவிட்டது, அது ஒரு காலம், ஒரு வேளை வயிறு நிறையவே  இப்போது நாள் முழுவதும் தெருக்களில் சுற்ற வேண்டி யிருக்கிறது, குடியிருப்பு பகுதிகள் என்றால் பாலித்தீன் பைகளில் சுருட்டி போட்ட காய்கறி மிச்சங்கள், அல்லது உணவு எச்சங்கள்,தாகத்திற்க்கு கழிவு நீர்தான்,மார்கெட்டில் பொழுது போன நேரம் பார்த்து கிடைத்த அழுகின முட்டைக்கோஸ்,தக்காளி,கீரை வகைகள், அதுவும் இல்லாத சமயம் சாலைகளில் நடந்தால் புதுப்பட சினிமா அல்லது பிறந்த நாள் காணும் அரசியல் தலைவர்களின் சுவரொட்டிகள் , சில நேரங்களில் இவை கூட கிடைப்பது கடினம்தான்,ருசியாக எள்ளு, கடலை, பருத்திப் பிண்ணாக்கு, பார்த்து நாட்கள் மாடுகளின் காலக் கணக்குப்படி இருபது வருடங்கள் ஆகியிருக்கும்.

சரி அப்படியே மெதுவாக உலாத்திவிட்டு வரலாம்.கூட துணையும் இல்லை,தான் ஒட்டிக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பிரிந்து வந்து  சில நாட்கள்தான் ஆகிறது. சுற்றும் பார்த்துவிட்டு மெதுவாக சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தது. பின்னங்காள் ஒன்றில் உடைத்துப்போட்ட கண்ணாடி சில்லு கால் குளம்பில் ஏறி  இழுத்துக்கொண்டு நடந்தது காளை. நன்றாக நினைவிருக்கிறது,பார வண்டி இழுத்த நாட்கள், அப்போதெல்லாம் தினமும் மூண்று வேளை தவிடு, வடி கஞ்சி, ஞாயிறு நாட்களில் பிண்ணாக்கு. அவ்வ போது காளையேறுதல் கூட, அதுதான் கொம்பன் கடைசியாக மகிழ்ச்சியுடன் இருந்த நாட்கள், உரிமையாளர் ரிக்ஸா ஒன்று வாங்கி விட்டதால் வளர்த்த பாசம் காரணமாக கறிக்கு அனுப்பாமல் அவிழ்த்து விட்டுவிட்டார். சில நாட்கள் அங்கேயே சுற்றி வந்துவிட்டு  பின் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்ட போது செல்ல இடம் தெரியாமல் சுற்றி திரிந்து ஒரு கூட்டத்தில் சேர்ந்து, அலைந்து ஒன்றாக புசித்து சில பல நாட்டு ரக பசுக்களுக்கு பேருந்து நிலையத்திலோ அல்லது காய்கறி சந்தையிலோ பிள்ளை வரம் கொடுத்து ஓடியது சில நாட்கள்.

கடைகள் அடங்க ஆரம்பித்திருந்தன, சுற்றி வந்தது காளை. நாய் ஒன்று 'வள்'ளென்று குரைத்தது, மிரண்டு அப்பக்கம் ஒடியது. தண்ணீர் இருந்தால் தேவலாம், தாகமாக இருந்தது, குடிப்பதற்க்கு தண்ணீர் கிடைப்பதோ மனித உருவத்தில் இருந்தால் தான் சாத்தியம் போல் தெரிகிறது.ஆழ்துளை கிணறுகள் வெட்டவோ இல்லை அக்வாகார்ட் உபயோகிக்கவோ தோதாக உடல் அமைப்பு இல்லாததை நினைத்து வருத்தமாக இருந்தது. சிரமம்தான் மிருகமாய் இருப்பது அதுவும் மனிதனிடம் வளர்ந்துவிட்டு பின் விரட்டி யடிக்கப்பட்டு இப்படி உணவுக்காக திரிவதென்றால், கொடுமையாகத்தான் உணர்ந்தது. தார் சாலை நேற்றுதான் புதிதாக போட்டது போல,வாகனங்கள் சென்று தெறித்த சிறு சிறு கற்கள் கண்ணாடி சில்லு ஏறிய காலை பதம் பார்த்தது.வலியுடன் முனகியது.

பசி,வலி போன்ற இயற்க்கையின் உந்துதல்களை அந்தந்த உடலுறுப்புகள் கூட தாங்கிக்கொள்ளக்கூடும் அது ஏற்படுத்தும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை சமாளிக்க கடினமாகத்தான் இருந்தது.சில வருடங்களாகத்தான் இப்படி. தானும் மற்றக் காளைகளை போல எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திராது.தன் நிலைமையை நினைத்து நொந்து குட்டிச்சுவர் ஒன்றில் முட்டிக்கொண்டது.தனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது,இத்தனை நாட்கள் தன் இனங்கள் காணாத பரிணாம வளர்ச்சி தனக்கு 
மட்டும் எப்படி சாத்தியமானது.அந்த போதி மரத்தடியில் தன்னைப்போல எல்லா மாடுகளும்தான் ஓய்வெடிக்கின்றது தனக்கு மட்டும் ஏன் இப்படி. ஒன்றும் புரியவில்லை.ஆம்!!!

மாடுகளின் நாட்காட்டியில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு..

ஊரின் ஒதுக்குப்புறத்தில் இடுகாட்டின் ஓரம் அமைந்த ஒரு அரச மரத்தடியில் காளை தன் கூட்டத்துடன் உட்க்கார்ந்து மந்தகாசமாக அசைபோட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு உதறல் தலையை சிலுப்பிக்கொண்டு எழுந்தபோது உடல் ரோமமெல்லாம் குத்திட்டு நின்றது.குளிராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டது, எழுந்து சோம்பல் முறித்தது.கெட்ட கனவொன்று கண்டது போல் இருந்தது.சுற்றிலும் வேறு பசுக்களோ காளைகளோ இல்லை,தான் மட்டும் எப்படி இவ்வளவு நேரம் இங்கு,அந்த இடமே அமானுஷ்யமாக இருந்தது.அருகே சிதிலமடைந்த நிலையில் ஒரு கோயில் பார்க்க கோயில் மாதிரியும்  இல்லை, ஆனால் பழங்கால கட்டிடம்,அருகே அம்மணமாக ஆண் சிலைகள் தலை இல்லாமலோ அல்லது கைகள் இல்லாமலோ,யாராலையோ இடிக்கப்பட்டது போல் தோன்றியது. அதில் ஒரு சிலை தவமிருக்கும் நிலையில் தன்னையே பார்ப்பதுபோல் இருக்கவே  கொம்பன் தலையை  வேறுபக்கம் திருப்பிக் கொண்டது.அப்போது ஒன்றும் உறைக்கவில்லை, அடுத்த நாளும் அதே இடத்திற்க்கு சென்றது.ஏனோ மீண்டும் மீண்டும் அங்கு செல்ல வேண்டும் போல் இருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் புத்த விகாரம் இருந்ததாகவும் பின் வந்த மன்னர்களால் அது இடிக்கப்பட்டதாகவுமான ஒரு வரலாற்றை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஆதலால் சந்தேகமே வேண்டாம் கொம்பன் பார்த்தது சிதிலமடைந்த புத்த விகாரம்தான்,அந்த மரமும் போதி மரமாக இருக்கலாம் ஆராய அவசியமில்லை.விஷயம் இதுதான்,கொம்பன் காளைக்கு போதி கிடைத்துவிட்டது.இவ்வளவு சுலபமாகவா என்றால் ஆம்தான் இல்லை என்றால் இல்லை.

இப்படியாக ஒரு வாரம் செல்லவே காளையின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் இருந்ததை சக மாடுகள் கண்டு கொள்ள ஆர்ம்பித்தன.உணவு தேடியலைந்தது போக மற்ற நேரங்களில் சிதிலமடைந்த கோயிலின் முன் உட்க்கார்ந்து கண்களை மூடி தியானம் செய்வதும், (மாடுகள் கால்கள் பிண்ணி அமர்ந்து தியானம் செய்வது சாத்தியமில்லையென்றாலும் கொம்பன் தன் பின்னங்காள்களை தரையில் மடித்து உட்க்கார்ந்தும் முன்னங்கால்களை முகத்துக்கு நேரே நீட்டிக்கொண்டும் தியானம் செய்தது ஒன்றும் வியப்பில்லை, இதை கற்பனை செய்து பார்ப்பதற்க்கு வாசகர்கள் தடுமாறலாம் ஆனாலும் வேறு வழியில்லை இக்கதையின் கரு அப்படி).

சில நாள் நடுநிசியில் திடீரென தலை சிலுப்பி சன்னதம் கொண்டு ஆடுவதும்,எதாவது கேட்டால் மோன நிலையில் வாயோரம் புத்தரை போல மெலிதாக ஒரு புன்னகை புரிவதுமாக,காளை புன்னகை புரிகிறதென்றால் நம்ப முடியாமல்தான் உள்ளது ஆம் அது அப்படித்தான்.சக காளைகள் கொம்பனின் அருகில் வரவே தயங்கின.நாட்கள் உருண்டோட  மற்ற காளைகள் போல் கொம்பனால் இருக்கமுடியவில்லை, தனக்குள்ளேயே முனுமுனுத்துக் கொண்டு திரிந்தது.கேட்டால் மந்தகாசமாக ஒரு புன்னகை.

அதன் பிறகு எப்போதும் கூட்டத்தை விட்டு தனித்து செல்லவே விரும்பியது கொம்பன்.உணவு தேடும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஏதோ சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தது,பசி எடுக்கிற சமயம் மட்டும் ஏன் எதுவும் சிந்திக்க தோன்றவில்லை என்றும் சிந்தித்து பார்த்தது,ஒன்றும் மட்டுப்படவில்லை.

ஒரு சமயத்தில் இது மாதிரி கோளாறான சிந்தனைகள் அலுப்பை உண்டாக்கியது,காரணம் இயற்க்கையின் உந்துதல்கள்,காளையேறி பல நாட்கள் ஆகிறது மறுபடியும் தன் கூட்டத்திலே சேரலாம்,மனிதனின் சுபாவங்கள் சிலவற்றை காளை தன் கூட்டத்திடம் பிரயோகித்து பார்க்கலாம் என்று நினைத்தது.

ஒரு நாள் நிசியில் சன்னதம் கொண்டு எழுந்து ஆடி சக மாடுகளை கூட்டி தனக்கு போதம் வந்துவிட்டதாகவும்.நான் சாதாரன காளை மாடு இல்லையென்றும் நான் உங்களின் மீட்பர் என்றும் அதை தன் கனவில் இறக்கையுடன் கூடிய இரண்டு கெடாரிகள் வந்து சொன்னதாகவும்,கூறவே முதலில் யாரும் நம்பவில்லை. சில இளங்க்காளைகள் சிரித்துக் கொண்டன. சில கன்றுகளும் அதன் தாய் பசுக்கள் மட்டும் பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தன.

இருந்தாலும் காற்று கொம்பனுக்கு சாதகமாகவே வீசியது.

பின்னாளில் கொம்பன்  தன்னை  நம்பும் சில காளைகளையும் சில ஜெர்சி ரக பசுக்களையும் கூட்டி கோயிலின் அருகில் இருக்கும் அரசமரத்தடியில் பிரசங்கம் உபாசனைகளும் நடந்தேற்றியது.  நாளைடவில் பக்கத்து ஊர் நாட்டு பசுக்களுக்கும்  செய்தி பரவி கொம்பனை கேட்க்க வரும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.மரத்தடியில் வெட்டவெளி ஆசிரமம் ஏற்படுத்தும் அளவிற்க்கு பிரசித்தி பெற்றது. கொம்பனான்டி என்றால் தெரியாத மாடுகளே கிடையாது சுற்று வட்டாரத்தில்.காளைகள் சிஷ்ய கோடிகளாக சேர்ந்து பணிவிடை செய்தன.இரவு நேரங்களில் சில உயர்ரக சிந்திப் பசுக்களை அழைத்து வந்து பஜனை நடந்ததாக வந்த செய்தி  கொஞ்சம் மிகையாக இருக்கலாம். செக்ஸ் ஆராய்ச்சி என்று சொல்லி சமாளிப்புகள் நடந்தன. எதிர்ப்புகளும் எழாமலில்லை.

சிறிது நாட்கள் இப்படியாக ஓடியது,ஆனாலும் உண்மையை  அறைகுறையாக  அறிந்தவன் உறங்கியதில்லை, கொம்பனுக்கு இந்த வாழ்க்கை முறையும் சலித்துதான் போனது, தான் தேடிப் புல் மேய்ந்து தினம் பல காளையேறி வெயிலேறி தகிக்கும் தார் சாலைகளில் சாணி போட்டு  உழன்று மடியும் இனமில்லை என்ற எண்ணம் சிந்தையை உலுக்கிக் கொண்டே இருந்தது.ஒரு நாள் தான் வடதிசை நோக்கி நான்கு கால்நடையாக பிரயாணம் போகப் போறதாகவும் தன்னுடன் வருபவர்கள் வரலாமென்று கூறவே சிஷ்ய மாடுகள் மறுக்க ஆசிரம பணிகளை அதுகளிடம்  ஒப்படைத்துவிட்டு கிளம்பியது.

வடதிசை பிரயாணங்களின் போது சில நாட்கள் பெருநகரங்களில் சுற்றியது. அங்கு உயிரினங்கள் வாழ தோதான சூழ்நிலைகள் இல்லையென்று அறிந்துகொண்டது.கண்ணுக்கு எட்டின தூரம் வரை புல்பூண்டையே காணும்,மனித இனம் மட்டும் எப்படி பிழைக்கிறது என்பது ஆச்சர்யமாகதான் இருந்தது,பின் மிகவும் பிரயத்தனம் செய்து அந்த உண்மையை தெரிந்து கொண்டது.அதை யாரிடமும் சொல்வதாக இல்லை.

வட திசை பயணத்தின் ஒரு நாளில் டெக்கான் பீடபூமியில் மார்கழி இரவுக் குளிரில் மனம் அலைபாயவே எழுந்து நான்கு கால் போனபோக்கில் நடந்தது. தூரத்தில் மூன்று இளங்காளைகள் ஒன்றை ஒன்று முட்டி விளையாடிக் கொண்டிருந்தன, அருகில் மங்கிய வெளிச்சத்தில் ஒரு பசு நிற்பது தெரிந்தது. வெட்டவெளி ஆசிரமத்தில் நாளைக்கு ஐந்து என்று ஏறிய காலமெல்லாம் இல்லை, போராடுவது சிரமம், பேசி மயக்கி வேண்டுமானால் பார்க்கலாம் மனித காளைகள் போல. "இது வேலக்கி ஆகாது" இருந்தாலும் முயற்சி செய்து பார்த்தது,சமாளிக்க முடியவில்லை,சிறு காயங்களுடன் தப்பித்து ஓரமாக வந்து நின்றது,ஒன்றும் பலனில்லை.பார்த்து ரசிக்க மட்டுமே முடிந்தது.

சிரித்துக்கொண்டே தோற்றுப்போன காளைகளோடு சேர்ந்து திரும்பி நடந்தது.மனிதனின் குணங்கள் தனக்கும் தொற்றிக் கொண்டதை நினைத்து வெட்கிய நேரம் முகத்தில் சுளீரென்று வெளிச்சம் அடித்தது. அதிலிருந்து இரண்டு மனித உருவங்கள் கரிய நிழல் போல தன் முன்னால் நெருங்கி வருவது தெரிந்தது.நெருங்க நெருங்க ஏதோ ஆபத்து வருகிறது என்று மட்டும் சூதாரித்து ஒரு முடிவுக்கு வந்த நேரம் கொம்பனும் மற்ற காளைகளும் ஒரு டெம்போ வேனில் ஏற்றப்பட்டு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தன.பின் கொம்பன் ஒற்றைக் காளையாக குடோனில் அடைப்பட்டிருந்த தன் சக மாடுகளையெல்லாம் காப்பாற்றி வெளியே வந்ததெல்லாம் வேறு கதை.
                                                                                                   
அது நடந்த ஆகிறது பல காலம்.இந்த இருபத்தைந்து வருடங்களில் எங்கும் சுற்றி இறுதியில் ஆரம்பித்த இடத்திற்க்கே வந்து சேரத்தான் முடிந்தது.பழைய நினைவுகள் வருவதும் போவதுமாக இருந்தது. பின்னிரவு நேரம்,சாலைகளில் மனித நடமாட்டம் மங்கியிருந்தது,அப்போதும் கூட மனிதன் பிற உயிர்களை நடமாட விடுவது கிடையாது,சுளீரென்று முதுகில் அடி விழுந்தது காளைக்கு, பழக்கடையை மூடிக்கொண்டிருந்த கடைக்காரன் கத்தினான், துள்ளிக் கொண்டு சாலையின் அப்பக்கம் ஓடியது.எதை வைத்து அடித்தான் என்று தெரியவில்லை,அடித்த இடம் எரிந்தது.சாலையின் ஓரமாக சென்று பின்னங்கால்களை மட்டும் மடக்கி உட்க்கார்ந்து மூத்திரம் கால்களில் தெளிக்காமல் பெய்தது.எரிச்சலாக இருந்தது.ஹஸ்த பாதாங்குதாசனம் கற்றுக்கொண்டது வசதியாக போயிற்று. நிறைய தெரிந்துகொண்டுதான் இருந்தது இத்தனை வருடங்களில். பயணங்கள் என்றுமே அலுத்துபோனதில்லை இந்த காளைக்கு.

தன் இருபத்தைந்தாண்டு பயணங்களில் மனிதர்களின் நடவடிக்கைகள் ஆச்சர்யமூட்டுவதாகவே இருந்தது.மனித இனம் தன் இனத்தை விருத்தி செயவதை ஒரு தொழிலாகவே செய்வதை அறிந்து திகைத்தது.பசுவை ஏமாற்றி பால் கறக்கும் விதத்தையும் மேலும் பசுவை சிணை பிடிக்க வைக்க வெள்ளைக் கோட் போட்ட ஒரு மனிதன் ஊசி போன்று கையில் வைத்திருக்கும் தன் ஆண் குறியை பயன்படுத்துகிறானென்றும் அந்த குறியை எளிதாக தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளவும் குளிர்பெட்டியில் வைக்கவும் செய்கிறான் என்பதையும் அறிந்து மிரண்டு போனது.அதிகம் தெரிந்து கொள்வதும் ஆபத்தானதுதான்.

எல்லாம் தெளிவு பெற்றும் ஒரு குறை இருந்தது.அதுதான் மொழி ஆளுமை. பின் அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.சாட்சாத் சரஸ்வதி தேவியை நோக்கி பத்து திங்கள் ஒரு மலையடிவாரத்தில் தவம் இருக்கவே அந்த வரமும் கிடைத்துப் போனது. பின் சில பல மனித மொழிகளை  படிக்கவும் கற்றுக்கொண்டது. ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் அளவிற்க்கு இல்லை யென்றாலும் ஓரளவிற்க்கு புலமை பெற்றிருந்தது. அஃறினைகளுக்கு இது எப்படி சாத்தியம் என்று கேட்க வாசகர்கள் முயல வேண்டாம்,கதை ஒரு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது, விட்டு விடுங்கள்,அவ்வபோது குப்பையில் கிடைக்கும் நாளிதழ்கள், வார இதழ்கள் மூலம் மனித இனத்தின் நாட்டு நடப்பு செய்திகளை தெரிந்து கொண்டது. பின் ஹிந்தி, அங்கிலம் போன்ற மொழிகளும் எழுதப் படிக்க கற்றுக்கொண்டது. முதலில் ஹிந்தி கற்க நேரும்போது மனதுக்குள் ஹிந்தி எதிர்ப்பு துளிர்விட்டது.வேறு வழியில்லை தன்னைப் போன்ற நாடோடிகளுக்கு மொழி பேதம் ஏது, ஹிந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி  அடையப்போவது ஒன்றுமில்லை.

உயிரியல் தத்துவங்களுக்கும் குறையில்லை.குப்பையில் கிடந்த பள்ளி மாணவனின் விடைத்தாளிலிருந்து டார்வின் கொள்கையையும் மனித உடலின் அனாட்டமியையும் அறைகுறையாக தெரிந்து கொண்டது.பரிணாம வளர்ச்சியின் பயனாக உயிரினங்களின் தலை,கை,கால்கள் ஆகியவற்றை தேவைக்கேற்ப நீட்டி,முழக்கி வடிவமைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து தன் கால்களை வளைத்து நெளித்து பார்த்தது. பின்னங்கால்களில் பாதி எழுந்து நின்று விட்டை போட்டுவிட்டு முன்னங்கால்களை பின்னால் வளைத்து தண்ணீர் ஊற்றி அலம்ப முயற்சி செய்து பார்த்து பின் இது அதீத கற்பனை என்பதையும் உணர்ந்து மனதுக்குள் சிரித்துக் கொண்டது.அந்த முயற்ச்சியை கைவிடாமல் தோதாக சில யோகாசன முறைகளையும் பழகிப் பார்த்தது.

நாட்கள் செல்ல செல்ல மெதுவாக புரியத் துவங்கியது தான் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கிறோம் என்று.தான் ஒரு காளை என்றும் அது மனித இனம் தங்களுக்கு பொதுவாக சூட்டிய பெயர் என்றும் தெரிந்து கொண்டது.

அவ்வபோது சில அரசியல் கட்சி கூட்டங்களையும் தொண்டர்கள் பின் ஒரு ஓரமாக உட்க்கார்ந்து கேட்க்க வாய்ப்பிருந்தது,எல்லாம் செய்தாலும் வயிற்றுப் போராட்டம் பெரும்பாடாகவே இருந்தது.சில நேரங்களில் உடல் பசிக்கு துணை தேடுவதும் அறிதாகவே நடந்தது.காலையேறி வருடம் இருக்கும், தியானம்,யோகாசன பயிற்சி  காரணமாக அதை துறந்தாகிவிட்டது, சில முறை கட்டுப்படுத்த முடியவில்லை. இது மாதிரி நேரங்களில் மனித இனம் தன் கைகளை பயன்படுத்திக்கொள்ளும் என்பதை ஒரு பருவ இதழில் கொம்பன் படித்திருந்தது.தனக்கு அந்த வசதி இல்லையென்று நினைக்கும் போது தாங்கொனா துயரில் ஆழ்ந்தது.

எத்தனை படிப்பிணைகள்,தன் வாழ்வு மற்ற காளைகள் போலல்லாமல் இனிதே முற்று பெற்றுவிட்டதாக உணர நேர்ந்தாலும் அநேக நேரம் நிம்மதி இழந்து தவித்தது. அது தூங்கிப்போன சிந்தையை எழுப்பிக் கொண்டே இருந்தது.

குடலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்த உலோகத் துகள்கள் வயிற்றில் ஏற்படுத்திய அரவம் காளையின் குடலை அரித்துக்கொண்டே இருந்தது இன்னும் எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை.தான் சிந்தித்தவற்றை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோக போகிறோம் என்று நினைக்கையில் துயரம் உணவுக் கவளம் வைத்திருந்த தொண்டையை அடைத்தது.துயரத்தை அடக்கி கவளத்தை மறுபடியும் வாயில் கொண்டு சென்று அசைப்போட்டது.

எவ்வளவு நேரம் சாலையோரங்களில் குப்பைகளை மேய்ந்தாலும் பசி மட்டும் அடங்காதுபோல.எழுந்து மறுபடியும் நடந்தது.சுவற்றில் புதுப்பட போஸ்டர் ஒட்டியிருந்தது. அதில் இருந்த மனிதனின் உருவத்தை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தது, அந்த போஸ்டரை அப்படியே விட்டுவிட்டு பக்கத்தில் "பருவ ராகம்" என்ற படப் போஸ்டர் ஒட்டியிருந்தது.அதை கிழித்து திண்று பசியை தீர்த்துக்கொண்டது. பசி அடங்கவில்லை, திரும்பி நடப்பது வீண்,காலையில் பார்த்துக் கொள்ளலாம்.சாதாரன காளையாக இருந்து கிடைத்ததையாவது அனுபவித் திருக்கலாம் என்ற எண்ணமும் வந்து போகாமல் இல்லை.முதலில் இந்த பாரத்தை இறக்கி வைத்தால் தேவலாம் போல் இருந்தது. மிதமாக வீசும் குளிர் காற்று என்னவோ செய்தது.சினிமா சுவரொட்டியை பார்த்ததிலிருந்து மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஊருக்கு வெளியில் சென்று பச்சையாக ஏதும் மேய்ந்து பார்க்கலாம் என்றாலும் போகப்போக நீண்டுகொண்டே செல்கிறது நகரத்தின் ஆக்கிரமிப்பு , அதற்க்கு பேசாமல் இங்கேயே கடைத் தெருவில் மீந்து போனது எதாவது கிடைக்கும். வாயிலும் கண்களிலும் நீர் ஒழுக அலைந்தது.தனக்கு இவ்வளவு ஞானம் கிடைத்தாலும் அதை வைத்துக்கொண்டு நாள் முழுக்க சிந்தனை செயவது தவிர வேறொன்றும் செய்வதற்க்கில்லை என்பதை நினைத்து மனம் வேதனை அடைந்தது. தூக்கம் வராமல் உலாத்தியதில் களைத்துப் போயிருந்தது.சுற்றும் முற்றும் பார்த்து உட்க்கார்ந்து மீண்டும் பழைய நினைவுகளை அசைப்போடத் துவங்கியது. 
                                                  
                                                        ----தொடரும்----

Related Posts